யாழ் முதல்வர் எடுத்த திடீர் முடிவு இராஜினாமா

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பில் அவர், யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் முலம் தெரியப்படுத்தியுள்ளார்.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் கடந்த 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக முதல்வராக பணியாற்றிய மணிவண்ணன், நாளைமுதல் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாக வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும், கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதரவு கிடைக்காத நிலை
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டிருந்த நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.