பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை!

பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை!

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனாலேயே சிறிலங்கா அதிபர் தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS