104 மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 மியன்மார் அகதிகளும் திங்கட்கிழமை (19) இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 அகதிகளும் இரண்டு பஸ்களில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே 104 மியன்மார் அகதிகளும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.