தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரி மீது கோப்பாயில் தாக்குதல் முயற்சி!கார் கண்ணாடி உடைப்பு

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரி மீது கோப்பாயில் தாக்குதல் முயற்சி!கார் கண்ணாடி உடைப்பு

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரிமீது தாக்குதல் முயற்சி! கோப்பாய் பொலிசாரால் மீட்பு.

தெல்லிப்பளை வைத்தியசாலைசட்ட வைத்திய அதிகாரி கோப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் மானிப்பாய் பொலிசார் தமது பிரிவுட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவரை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தி கோப்பாயில் இருந்து சட்ட வைத்திய அதிகாரி தனது காரில் கோப்பாய் வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்ததோடு சட்ட அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் சட்ட வைத்திய அதிகாரியை தாக்கவும் முயற்சித்துள்ளனர்

வைத்தியஅதிகாரி உடனடியாககோப்பாய்பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கோப்பாய் பொலிசார் விரைந்து சட்ட வைத்திய அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளதோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளார்கள்

கைது செய்யப்பட்டவர்கள் அரசடி கோப்பாய் திருநெல்வேலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் கோப்பாய்பொலிசார் தெரிவித்தனர்

CATEGORIES
Share This

COMMENTS