பிரபல விஞ்ஞானிகளை பின்தள்ளி இங்கிலாந்தில் சாதனை படைத்த இலங்கை மாணவி

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்த பெறுபேற்றை பெற்று அனைவரது பாராட்டையும் வென்றுள்ளார்.
10 வயதான அரியானா தம்பரவா ஹேவகே,என்ற சிறுமி மென்சா ஐக்யூ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங், இருவருமே 160 மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். அரியானா, அவர்களின் சாதனையை முறியடித்து, இப்போது உயர் IQ சொசைட்டியான மென்சாவில் உறுப்பினராக அழைக்கப்பட்டுள்ளார்.
அரியானா புத்தகங்களை நேசிக்கிறார் மற்றும் கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். யார்க்ஷயர் லைவ் அறிக்கையின்படி, ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க முதன்மை அகாடமியில் படிக்கும் அரியானா, ஒரு நாள் பிரபல விஞ்ஞானியாக மாறுவார் என்று நம்புகிறார்.
CATEGORIES Viral News