2 வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள்! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

2 வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள்! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயது பெண் குழந்தையொன்று ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெற்றோரின் கோரிக்கை அடிப்படையில் குழந்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து உடனடியாக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை வீட்டிலிருந்து போதைப்பொருளை விளையாட்டாக எடுத்து உட்கொண்டு இருக்கலாம் என்று விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This