கூட்டமைப்பு அறிவுரை சொல்ல சிறிபாலவுக்கு தகுதியில்லையாம்! சிறிதரன் காட்டம்

கூட்டமைப்பு அறிவுரை சொல்ல சிறிபாலவுக்கு தகுதியில்லையாம்! சிறிதரன் காட்டம்

தமிழர்கள் ஆயுத பலத்தோடு நின்று பேசிய போது தீர்வைத்தர முன்வராத நிமால் சிறிபால இன்று எங்களுக்கு ஆலோசனை கூற வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒரு தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.அது நடக்கக் கூடாது என்பதற்க்காகவே முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளனர் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு வித்தியாசாலையில் இடம்பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருமான வேலுப்பிள்ளை சிவயோகன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் அரச தரப்பில் இருந்து பேச்சுக்களில் ஜீ.எல் பீரிஸ் மற்றும் நிமால் சிறிபால டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர் அப்போது முன்வைத்த தீர்வு தான் என்ன அப்போது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க பலத்தோடு இருந்தபோது பயங்கரவாதிகள் என்றும் நாட்டை பிளவுபடுத்த முயல்கிறார்கள் என்றும் கூறிவிட்டு எமக்கு ஆலோசனை கூற வருகிறார்.

எம்மை நோக்கி எதிரியே எள்ளி நகையாடுகிற அளவிற்கு நாங்கள் இருக்கக்கூடாது நாம் அனைவரும் எமது இன விடுதலைக்காக ஒன்றுபட வேண்டும். நாங்கள் இன்னும் ஒரு எல்லையை தொடவில்லை. நாங்கள் ஒரு துளி கூட எங்களுடைய நீண்டகாலம் பேசுகின்ற எங்கள் அரசியல் உரிமைகள் ஒரு புள்ளியைக் கூட. எங்களால் இன்னும் தொட்டு நிற்க்க முடியாத ஒரு இனமாக நாங்கள் நிற்கிறோம்.

பழைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலமையிலே மீண்டும் ஒரு எல்லை நிர்ணய குழு ஒன்றினை அரசாங்கம் நியமித்துள்ளனர். இங்கு இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று இலங்கை ஒரு ஜனநாயக தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் விரும்பவில்லை,. தேர்தல் நடக்கக் கூடாது உள்ளூராட்சி மன்ற தேர்தல்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றபோது உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்படுகிறது.

அப்படி என்றால் எல்லை நிர்ணய குழு அறிக்கை வரும்வரை தேர்தல் நடாத்தப்பட முடியாது அது சட்டம். ஆகவே இது தேர்தலை தள்ளிப்போடுவதற்க்கான உத்தியாக ஒன்று.

இரண்டாவது முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மன்னார் மாவட்டங்களிலே அபகரிக்கப்படுகின்ற தமிழர்களுடைய நிலங்கள் பொலனறுவையோடும் அனுராதபுரதோடும் சேர்க்கப்படுகின்ற நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து சிங்கள பிரதேசமாக அவற்றை மாற்றுவது.அங்கு சிங்கள பிரதிநிதிகளை உருவாக்குவது.

நெடுங்கேணி எவ்வளவு தூரம் அந்த பிரதேச சபை எங்களது கைகளை விட்டு ஒரு சிங்கள பிரதேசமாக மாறியதோ அதே வகையில் அந்த பரிதேசங்களெல்லாம் சிங்கள மயப்படுத்துகின்ற செயற்பாட்டுக்கு அரசாங்கம் ஒரு பிள்ளையார் சுழியை முதலிலே வகுத்துள்ளது.

மிக முக்கியமாக நாங்கள் எல்லோரும் எஙகளுக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகளை பேசுகின்றோம். என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS