ஓடும் மகிழுந்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்: அபராதம் விதித்த வாடகை மகிழுந்து நிறுவனம்!

ஓடும் மகிழுந்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்: அபராதம் விதித்த வாடகை மகிழுந்து நிறுவனம்!

இங்கிலாந்தில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு வாடகை மகிழுந்து நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.

லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். ஏற்கனவே 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை மகிழுந்தில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்தார்.

மகிழுந்து மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மகிழுந்துலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அபராதம்

அதன் பின்னர் கார் வைத்தியசாலை சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், ஓடும் மகிழுந்தில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாராவுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.

காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.25,000) செலுத்த வேண்டுமென பாராவுக்கு அந்த வாடகை கார் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS