தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு கிடைத்த உயர் அரச விருது

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு உயர் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை அவர் தன்வசப்படுத்திக் கொண்டார்.
ஆதுரசாலைக்கு விருது
சிவலிங்கம் ஆருரன் என்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரே தான் எழுதிய நூலுக்காக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார் .
ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலாக விருது வழங்கப்பட்டது.
கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.