இரட்டை குடியுரிமை சர்ச்சை – சபாநாயகரின் முடிவு வெளியானது

இரட்டை குடியுரிமை சர்ச்சை – சபாநாயகரின் முடிவு வெளியானது

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்தல் ஆணையமே தெரிவு செய்வதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் சவால் விடுக்கும் திறன்

மேலும், இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் சவால் விடுக்கும் திறன் நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர், வேறு எம்.பி.க்கள் எவரேனும் இருக்கின்றார்களா என்பது தமக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார்.

எதுவும் செய்ய முடியாது

இரட்டைக் குடியுரிமை குறித்து சட்டப்படி செயல்படாத வரையில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். சட்டங்களை தயாரிப்பது மட்டுமே நாடாளுமன்றத்தின் செயற்பாடு எனவும் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This