பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES செய்திகள்