25 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் சம்பவம்? டிரம்பிடம் தீவிர விசாரணை

25 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் (Donald Trump) விசாரணை நடைபெற்றுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது ஜீன் கரோல் என்ற பெண் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில், 1995 இறுதியில் அல்லது 1996 தொடக்கத்தில் நியூயார்க் நகரில் உள்ள சொகுசு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடை மாற்றும் அறையில் டிரம்ப் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நியூயார்க் பத்திரிகை ஒன்றில் 2019-ல் எழுதிய கட்டுரை அங்கு பேசு பொருளானது. ஆனால் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.
ஆனாலும் அந்தப் பெண், டிரம்ப் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் டிரம்பிடம் நேற்று முன்தினம் சத்திய பிரமாணத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதைத் தெரிவித்த அந்தப் பெண்ணின் வாக்கீல், டிரம்ப் அளித்த வாக்குமூலம் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. டிரம்ப் மீதான இந்த வழக்கில் வரும் பெப்ரவரி மாதம் 6-ம் திகதி அங்குள்ள சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பிடம் விசாரணை நடத்தப்பட்டதை அவரது வக்கீல் அலினா ஹப்பாவும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் இந்த விசாரணை நேரடியாக நடந்ததா அல்லது காணொலிக்காட்சி வழியாக நடந்ததா என்பது பற்றி தகவல் இல்லை.