கிளிநொச்சியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

கிளிநொச்சியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில், மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை, கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார், இன்று கைது செய்துள்ளனர். புளியம்பொக்கணை மற்றும் தர்மபுரம் பகுதியில், அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில், மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக, தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, விரைந்து சென்ற தர்மபுரம் பொலிஸார், நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர்களும், ஒரு உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட டிப்பர்கள், உழவு இயந்திரம் என்பன, நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This