இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய கொழும்பு வருகிறார் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம்!

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய கொழும்பு வருகிறார் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம்!

மீண்டும் இலங்கை
வருகிறார் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக உறுதிப்பாடு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்காக வழங்கக் கூடிய பங்களிப்புத் தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் நாட்டுக்கு வரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் இராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு தனது பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This

COMMENTS